ஆப்நகரம்

சூர்யா அல்லது விஜய்யை இயக்க விரும்பிய நிஷிகாந்த்: கடைசி வரை நடக்கல

நிஷிகாந்த் காமத் லய் பாரி மராத்தி படத்தை சூர்யா அல்லது விஜய்யை வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டதாக சங்கீத் க்ரிஷ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Aug 2020, 11:12 am
மாதவன், சங்கீதா க்ரிஷை வைத்து எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் கல்லீரல் பிரச்சனையால் நேற்று உயிர் இழந்தார். ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த தகவல் அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Samayam Tamil nishikant kamat


மாதவன் பட இயக்குநர் மரணம்: அதற்குள் போய்விட்டீர்களே என பிரபலங்கள் இரங்கல்

இந்நிலையில் நிஷிகாந்த் காமத் குறித்து சங்கீதா க்ரிஷ் கூறியிருப்பதாவது,

நிஷிகாந்த் காமத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது எனக்கு தெரியாது. கொரோனா வைரஸை பார்த்து பயம் இல்லை. ஆனாலும் நான் நெகட்டிவிட்டி வேண்டாமே என்று செய்திகளை பார்ப்பதை, படிப்பதை நிறுத்திவிட்டேன்.

நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது இல்லை. நிஷிகாந்த் காமத் இறந்துவிட்டார் என்று என் சகோதரர் போன் செய்து கூறியபோது அதிர்ச்சி அடைந்தேன்.

மாதவன் மூலமாக எனக்கு நிஷிகாந்தை தெரியும். பிதாமகன் படத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு எவனோ ஒருவன் படத்தில் என்னை நடிக்க வைக்க விரும்பினார். நான் அந்த படத்தில் வெறும் 7 நாட்கள் தான் வேலை செய்தேன் என்று நினைக்கிறேன். படத்தை 20 நாட்களில் முடித்துவிட்டார்.

அனைத்தையும் முன்கூட்டியே தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டார் நிஷிகாந்த். அந்த படம் மேடியின் தயாரிப்பு. அதனால் அவரின் குடும்பத்தார், நிஷிகாந்த், நான் படத்தை விளம்பரம் செய்ய அமெரிக்காவுக்கு சென்றோம். அங்கு நாங்கள் சாலைகளில் நடந்து சென்று பல இடங்களை பார்த்தோம். அப்பொழுது நான்றாக பேசிப் பழகினோம்.

நிஷிகாந்த் என்னை அம்மா என்பார். என்னம்மா, ஆமாம்மா என்பார். நான் தமிழ் பேசும் விதத்தை கிண்டல் செய்வார். சமூகத்தை நினைத்து எப்பொழுதுமே கவலைப்பட்டார். ஊழலை வெறுத்தார் நிஷிகாந்த்.

அந்த கோபத்தை தான் மேடியின் கதாபாத்திரம் மூலம் படத்தில் காட்டினார் என்று நினைக்கிறேன். நிஷிகாந்த் அமெரிக்காவுக்கு சென்று சுமார் ஓராண்டு அங்கிருந்தார். அப்பொழுது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் ரொம்ப சென்சிடிவானவர். அவர் இந்தி படம் தொடர்பாக ஆய்வு செய்தபோது ஏதோ அப்செட் ஆகிவிட்டார் போன்று.

யாருடனும் பேசாமல் இருந்தால் நீங்கள் மார்ஸுக்கு செல்லுங்கள் என்று அவரை நான் கிண்டல் செய்திருக்கிறேன். அவர் நாடு திரும்பிய பிறகு நெகட்டிவ் நியூஸை எல்லாம் பார்த்து ஓகேவா என்று கேட்டேன். அவரோ, நான் செய்திகளை பார்ப்பது இல்லை. நம்மை சுற்றி நடப்பதை அறியாமல் இருப்பதே நிம்மதியாக வாழ சிறந்த வழி என்றார்.

நிஷிகாந்த் வாட்ஸ்ஆப் பயன்படுத்தியது இல்லை. என் மகனின் புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைக்க விரும்பினேன். ஆனால் அவரை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. அவர் படங்களில் நடிக்கத் துவங்கினார். அவருக்கு போன் செய்து சார், ஆக்டிங்லாம் பண்றீங்க என்று கலாய்க்க நினைத்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

முன்பெல்லாம் போன் செய்தால் மீண்டும் போன் பண்ணுவார். பின்னர் போன் பண்ணுவதை நிறுத்திவிட்டார். லாய் பாரி மராத்தி படத்தை பார்க்குமாறு அவர் என்னிடம் கூறினார். அந்த படத்தை பாருங்கள், அதன் பிறகு சூர்யாவின் டேட்ஸ் வாங்கிக் கொடுங்கள் என்றார்.

காக்க காக்க படத்தை இந்தியில் ஃபோர்ஸ் என்கிற பெயரில் ரீமேக் செய்தார். காக்க காக்க படத்தை பார்த்த பிறகு அவர் சூர்யாவின் ரசிகர் ஆகிவிட்டார். லய் பாரி படத்தை தமிழில் சூர்யா அல்லது விஜய்யை வைத்து இயக்க நினைத்தார். எனக்கு மகள் பிறந்தபோது அவளை பார்க்க வந்தார். நான் என் கணவருடன் மும்பைக்கு வர வேண்டும் என்று கூறினார் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்