ஆப்நகரம்

ரூ.300 கோடி மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது!

ரூ.300 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கரநாடக திரைப்படத் தயாரிப்பாளரும் கூட்டுறவும் சொசைட்டி சேர்மேனுமான ஆனந்த் அப்புகொலை மும்பையில் கைது செய்துள்ளனர்.

TNN 19 Sep 2017, 11:33 am
மும்பை: ரூ.300 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கரநாடக திரைப்படத் தயாரிப்பாளரும் கூட்டுறவும் சங்கத்தின் சேர்மேனுமான ஆனந்த் அப்புகொலை மும்பையில் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil sangolli rayanna producer anand appugol arrested in mumbai on the charges of fraud
ரூ.300 கோடி மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது!


கடந்த 2012 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான வெற்றிப்படம் ‘சங்கொலி ராயண்ணா’. நாகண்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் தர்ஷன், ஜெயப்பிரதா, நிகிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர், இந்தப் படத்தை ஆனந்த் அப்புகொல் தயாரித்திருந்தார்.

இவர் சேர்மேனாக இருந்த, சங்கொலி ராயண்ணா கூட்டுறவுச் சங்கத்தில் முதலீடு செய்த 300 கோடி ரூபாயைத் திருடியதாக புகார் வெளியானது. இதையடுத்து, இவருக்கு எதிராக கரநாடக மாநிலம் பெலகாவியில் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், இவரை பெலகாவி போலீஸார் மும்பையில் கைது செய்துள்ளனர்.

Sangolli Rayanna Producer, Anand Appugol Arrested In Mumbai on the charges of fraud.

அடுத்த செய்தி

டிரெண்டிங்