ஆப்நகரம்

ஹீரோவுக்கு நிகரான சம்பளம் கேட்கும் தீபிகா

தீபிகா படுகோன் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்பதாக தயாரிப்பாளர்கள் புகார் கூறுகின்றனர்.

Samayam Tamil 12 Jun 2018, 3:22 pm
தீபிகா படுகோன் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்பதாக தயாரிப்பாளர்கள் புகார் கூறுகின்றனர்.
Samayam Tamil deepika-padukone


சஞ்சை லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் முக்கிய பாத்திரத்தில் நடித்து வெளியான படம் பத்மாவத். இப்படத்தில் பல சர்ச்சைகள் இருந்ததாலும் வசூலில் சாதித்துள்ளது. கூடவே தீபிகாவுக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்திற்குப் பின் அவர் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார். இர்பான் கானுன் தீபிகா நடிக்க இருந்த ‘சப்னா தீதி’ படம் இர்பானுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

வேறு படங்களும் இதுவரை அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் அவர் ஹீரோவுக்கு சமமாக தனக்கும் சம்பளம் கேட்பதுதான் என்று சில தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

பத்வாவத் படத்திற்காக இயக்குனர் பன்சாலி தீபிகாவுக்கு வழக்கத்தை விட அதிக சம்பளம் கொடுத்துவிட்டார். இதனால்தான் இனி வரும் படங்களுக்கெல்லாம் அதிக சம்பளம் வாங்குவது என்று தீபிகா முடிவெடுத்துவிட்டார் என்று தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். மேலும் கதை சொல்லும் இயக்குநர்களிடம் கதையில் கை வைக்கும் உரிமையும் கேட்கிறாராம்.

இதனிடையே, இந்த ஆண்டு இறுதியில் தீபிகாவுக்கு நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கல்யாணம் நடக்கப்போவதாகவும் பேசப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்