ஆப்நகரம்

இறந்த நண்பன் சேதுவுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம்: ரசிகர்கள் பாராட்டு

மறைந்த நடிகர் சேதுராமனின் புது மருத்துவமனையை சந்தானம் திறந்து வைத்துள்ளார்.

Samayam Tamil 30 Oct 2020, 5:10 pm
தோல் மருத்துவரான சேதுராமன் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமானார். மருத்துவத்துடன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த சேது கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
Samayam Tamil santhanam


35 வயதில் மாரடைப்பால் மரணமா என்று ரசிகர்கள் வேதனை அடைந்தனர். சேதுராமன் இறப்பதற்கு முன்பு ஈசிஆர் பகுதியில் தன் கிளினிக்கின் புது கிளையை துவங்க பூஜை போட்டார். அந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சேதுராமன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார். அவர் இறந்த பிறகு ஈசிஆர் கிளையை துவங்குவார்களா, இல்லையா என்கிற கேள்வி எழுந்தது.
View this post on Instagram ZI CLINIC ECR Pooja ! Praying and meditating for the positive energy to flow ! Get ready for this DESTINATION centre for hair ! A post shared by Dr. Sethu Raman (@dr_sethu) on Feb 23, 2020 at 6:46am PST
இந்நிலையில் கணவன் விட்டுச் சென்ற வேலையை அவரின் மனைவி உமா தொடர்கிறார். இதையடுத்து ஈசிஆர் கிளையின் வேலைகளை முடித்து சேதுராமனின் பிறந்தநாளான இன்று மருத்துவமனையை துவங்கியுள்ளனர். சேதுராமனின் நெருங்கிய நண்பரான சந்தானம் அந்த மருத்துவமனையை துவங்கி வைத்துள்ளார்.
மருத்துவமனையில் சேதுராமனின் ஆளுயர கட்அவுட்டை வைத்துள்ளனர். அந்த கட்அவுட்டுன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சந்தானம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கட்அவுட்டில் சிரித்த முகமாக இருக்கும் சேதுராமனுடன் சந்தானத்தை பார்த்த ரசிகர்கள் ஃபீல் செய்துள்ளனர்.

இறந்து போன நண்பனுக்கு சந்தானம் நல்ல காரியம் செய்துள்ளார் என்று அவரை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். சேதுராமன் இறந்தபோது அவரின் மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். அவர் அண்மையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சேதுராமனே குழந்தை வடிவில் வந்துவிட்டதாக அவரின் குடும்பத்தார் சந்தோஷப்பட்டுள்ளனர்.

அந்த குழந்தைக்கு வேதாந்த் என்று பெயர் வைத்துள்ளனர். சேதுராமன், உமா தம்பதிக்கு ஏற்கனவே சஹானா என்கிற மகள் இருக்கிறார். சஹானா மீது சேதுராமன் உயிரையே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் பிறந்தநாள் அன்று நீ இறந்துவிட்டாயே சேது: நண்பர் உருக்கம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்