ஆப்நகரம்

யாரும் வேண்டாம் சந்தானம் மட்டுமே போதும் என்று கூறிய அஜீத்!

மற்ற தொகுப்பாளர்கள் யாரும் வேண்டாம் சந்தானம் அவர்களே செய்யட்டும் என்று அஜீத் கூறியதாக நடிகர் சந்தானம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

TNN 20 Dec 2017, 1:57 pm
மற்ற தொகுப்பாளர்கள் யாரும் வேண்டாம் சந்தானம் அவர்களே செய்யட்டும் என்று அஜீத் கூறியதாக நடிகர் சந்தானம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Samayam Tamil santhanam only enough says ajith
யாரும் வேண்டாம் சந்தானம் மட்டுமே போதும் என்று கூறிய அஜீத்!


நடிகர் அஜீத் எப்போதும் தன்னுடன் நடிப்பவர்களை மதிப்பவர். அவர்கள் ஏதாவது கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் உடனே அவர்களுக்கு உதவி செய்வார். தற்போது நடிகர் சந்தானம் ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் நடிகர் சந்தானம், அஜித்தை பற்றி பேசினார். ‘‘பில்லா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் நேரத்தில் அஜீத் படம் குறித்து பிரபல தொலைக்காட்சியில் பேட்டியளிக்க முடிவு செய்திருந்தார். அப்போது அஜீத் மற்ற தொகுப்பாளர்கள் வேண்டாம் சந்தானம் அவர்களே இதை செய்யட்டும் என கூறினார். பிறகு தான் நான் அஜீத்தை பேட்டியெடுத்தேன்’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்