ஆப்நகரம்

போலீஸ் அதிகாரியாகும் காமெடி நடிகர் சந்தானம்

முதல் முறையாக காமெடி நடிகர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

TNN 31 Oct 2016, 5:56 pm
ஆனந்த் பால்கி இயக்கத்தில் காமெடி படத்தில் சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம். இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன், சேதுராமன் மற்றும் பச்சையப்பன் ஆகியோரது இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஓடி ஓடி உழைக்கனும் படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil santhanam to don the cop avatar in his next film odi odi uzhaikanum
போலீஸ் அதிகாரியாகும் காமெடி நடிகர் சந்தானம்

#OodiOodiUzhaikanum pooja today Here's the 1st look of the action comedy for @VasansVisual directed by K.S.Manikandan co*ing @AmyraDastur93 pic.twitter.com/OMirsAZU9T — Santhanam (@iamsanthanam) October 28, 2016 காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் சந்தானம் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இவர் போலீஸ் கான்ஸ்டபிள் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த அமைரா தாஸ்துர் முன்னணி ரோலில் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் கோவை சரளா, ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஆனந்த ராஜ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். சலீம் கவுஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். வரும் 7ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் படமாக்கப்படுகிறது. பாடல் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளில் எடுக்கப்படுகிறது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது சேதுராமனின் பெயர் சூட்டப்படாத படத்தில் சந்தானம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

On Friday, the actor began his next project- Odi Odi Uzhaikanumwhich is being directed by Manikandan of Kanna Laddu Thinna Aasaiyafame.

அடுத்த செய்தி

டிரெண்டிங்