ஆப்நகரம்

சந்தோஷ் நாராயணன் குடும்பத்தினருடன் வடிவேலு: என்ன விஷேசமா இருக்கும்?

நடிகர் வடிவேலுவை குடும்பத்துடன் சந்தித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 18 Sep 2021, 9:43 am
வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. இந்நிலையில் பாடகி தீ மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் வடிவேலு எடுத்து கொண்ட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Vadivelu
Vadivelu


தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகியுள்ள வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப்படத்திற்கு நாய் சேகர் என டைட்டில் வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சதீஷ் நடித்து வரும் படத்திற்கு இந்த டைட்டிலைவைத்துள்ளனர். இதனால் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் 'என்கிற டைட்டிலில் வடிவேலு நடிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் தான் வடிவேலுவின் புதிய படத்திற்கு இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அதனை உறுதி செய்யும் விதத்தில் தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குடும்பத்துடன் வடிவேலுவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எல்லா சீனுக்கும் ஒரே எக்ஸ்பிரஷன்: விஜய் ஆண்டனி நடிப்பை விமர்சித்த பிரபல இயக்குனர்!
குறிப்பாக பாடகி ‘தீ’ உடன் வடிவேலு இருக்கும் புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அண்மையில் வடிவேலுவுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அந்த லக்கி கேர்ள் நான் தான் என பிரியா பவானி சங்கர் போட்ட பதிவு இணையத்தில் படுவேகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

Vadivelu


லைகா பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள இந்தப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்