மகளிர் தினத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவை ஒரு படத்தில் பாடவைத்துள்ளார்.
உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ‘கபாலி’ படத்திற்கும், விஜய்யின் 60வது படத்திற்கும் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய அம்மாவை பெருமைப்பட வைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் தற்போது ‘இறைவி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு தனது அம்மாவை பாட வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இறைவி’ படத்தின் பாடல் ஒலிப்பதிவு முடிந்துவிட்டது. பெண்களின் பெருமை குறித்து ஒரு பாடலை எனது அம்மாவை பாட வைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.
‘இறைவி’ படத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ‘கபாலி’ படத்திற்கும், விஜய்யின் 60வது படத்திற்கும் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய அம்மாவை பெருமைப்பட வைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் தற்போது ‘இறைவி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு தனது அம்மாவை பாட வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இறைவி’ படத்தின் பாடல் ஒலிப்பதிவு முடிந்துவிட்டது. பெண்களின் பெருமை குறித்து ஒரு பாடலை எனது அம்மாவை பாட வைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.
‘இறைவி’ படத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.