ஆப்நகரம்

அந்தரங்க இடத்தில் கை வைத்தார்... கிரிக்கெட் வீரர் மீது பிரபல நடிகை பகீர் புகார்!

Sapna Gill, Prithvi Shaw: கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மதுபோதையில் தனது அந்தரங்க இடங்களில் கை வைத்ததாக பிரபல நடிகை குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Feb 2023, 2:28 pm
கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மதுபோதையில் தனது அந்தரங்க இடங்களில் கை வைத்ததாக பிரபல நடிகை குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sapna gill allegations against cricketer prithvi shaw
அந்தரங்க இடத்தில் கை வைத்தார்... கிரிக்கெட் வீரர் மீது பிரபல நடிகை பகீர் புகார்!


பிரித்வி ஷா - சப்னா கில்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா சமீபத்தில் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாது. அந்த வீடியோவில் பிரபல போஜ்பூரி நடிகையும் இன்ஸ்டாகிராம் பிரபலமும் ஆன சப்னா கில்லும், பிரித்வி ஷாவும் பேஸ் பால் பேட்டார் மோதிக்கொண்டனர். இந்த விவகாரத்தில் ஓஷிவாரா காவல் நிலையத்தில் பிரித்வி ஷா அளித்த புகாரின் பேரில் சப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Akshaykumar: ப்பா... 3 நிமிஷத்துல இத்தனையா... ஹாலவுட் நடிகரின் சாதனையை முறியடித்த அக்ஷய் குமார்!

சப்னா கில் குற்றச்சாட்டு

3 நாட்கள் விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்த சப்னா கில், பிரித்வி ஷா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். இதுதொடர்பாக மும்பை விமான நிலைய காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சப்னா, தனது நண்பர் ஷோபிட் தாக்கூர் கிரிக்கெட் ரசிகர் என்பதால் பிரித்வி ஷாவிடம் செல்ஃபி கேட்க சென்றதாகவும் ஆனால் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த பிரித்வி ஷாவும் அவரது நண்பர்களும் தாக்கூரை தாக்கியதாகவும் தெரிவித்தார்.
Sridevi: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்!

அதிர்ச்சி குற்றச்சாட்டு

மேலும் இதனை தடுக்க சென் தன்னையும் தகாத வார்த்தைகளால் பேசியதோடு எல்லை மீறி நடந்து கொண்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை சப்னா கில், பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். மேலும் தாங்கள் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவிடம் தவறாக நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Mayilsamy, Ajith: அஜித்தையும் உலுக்கிய மயில்சாமியின் மரணம்..

ஆபாசமாக பேசினார்

மேலும் பிரித்வி ஷாவும் அவரது நண்பரும் தன்னை அடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும், ஜாமீன் பெற்ற பிறகு அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளதாகவும் சப்னா கில் கூறியுள்ளார். சம்பவத்தின் போது பிரத்வி ஷா தன்னையும் தன்னுடன் இருந்தவர்களையும் ஆபாசமாக பேசி தாக்கிய கூறியுள்ள சப்னா கில், 23 வயதான அவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் என்பது தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Mayilsamy, Ajith: எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உங்களை பிடிக்கும் ... அஜித்தை உருக வைத்த மயில்சாமி!

அந்தரங்க இடத்தில் கை வைத்தார்

பிரித்வி ஷா யார் என்றே தனக்குத் தெரியாது என்பதால், அவருடன் செல்ஃபி எடுக்கும் கேள்வியே இல்லை என்றும் கூறியுள்ளார். பிரித்வி ஷா தன் மீது சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ள சப்னா கில், அவர் தனது நண்பரை அடித்ததாகவும், தான் தடுக்க முயன்ற போது தன்னை தாக்கி தனது அந்தரங்க உறுப்பைத் தொட்டதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை சப்னா கில்லின் இந்த குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்திலும் கிரிக்கெட் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடும் நயன்தாரா?

Sapna Gill

அடுத்த செய்தி

டிரெண்டிங்