ஆப்நகரம்

சினிமாவையும் தாண்டி சரண்யா பொன்வண்ணன் செய்து வரும் காரியம்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவையும் தாண்டி பெண்களுக்காக இந்தச் செயலை செய்து வருகிறார்.

Samayam Tamil 19 Apr 2018, 6:41 pm
நடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவையும் தாண்டி பெண்களுக்காக இந்தச் செயலை செய்து வருகிறார்.
Samayam Tamil saranya-ponvannan


தற்போது வெளியாகும் தமிழ் சினிமாவில் முக்கால்வாசி படங்களில் அம்மா கேரக்டரில் நடிகை சரண்யா பொன்வண்ணன்தான் நடித்து வருகிறார். அம்மா வேடம் என்றாலே அவரைத்தான் இயக்குனர்கள் முதலில் புக் செய்கின்றனர். இவர் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துவிட்டார்.

தற்போது நடிகை சரண்யா, சினிமாவையும் தாண்டி வேறொரு காரியம் செய்து வருகிறார். அது என்னவென்று சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில், ‘‘எனக்கு டெய்லரிங் மிகவும் பிடிக்கும். அவர் நடுத்தர பெண்களுக்காக ‘டிசைன் ஸ்கூல் ஆஃப் பேஷன் டெக்னாலஜி இன்டிடியூட்‘ஐ நடத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டியூட் மூலம் நிறைய பெண்களுக்கு இந்த தையல் தொழிலை கற்றுக் தருகிறாராம். இதன் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருவதாக கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்