ஆப்நகரம்

வங்கி கொள்ளைக்காரிகளாக நடித்த அம்மா நடிகைகள்!

‘இட்லி’ படத்தில் அம்மா நடிகைகள் சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோர் வங்கி கொள்ளைக்காரிகளாக நடித்துள்ளனர்.

TNN 7 Oct 2017, 12:45 am
‘இட்லி’ படத்தில் அம்மா நடிகைகள் சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோர் வங்கி கொள்ளைக்காரிகளாக நடித்துள்ளனர்.
Samayam Tamil saranya ponvannan kovai sarala both of them acting in idli tamil movie
வங்கி கொள்ளைக்காரிகளாக நடித்த அம்மா நடிகைகள்!


நடிகைகள் சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘இட்லி’. இந்தப் படத்தை ஆர்.கே.வித்யாதரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் வித்யாதரன் கூறுகையில், ‘‘‘இட்லி’ படத்தில் மூன்று பெண்கள் இணைந்து வங்கியை கொள்ளையடிக்கின்றனர். போலீஸ் அவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்கள் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பது கதை. படத்தில் நடிகைகள் சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோர் கொள்ளைக்காரிகளாக நடித்துள்ளனர். மேலும் படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, இமான் அண்ணாச்சி, மனோபாலா, தேவதர்ஷினி என 15 காமெடி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிவடையும் நிலையிலிருந்த போது கல்பனா திடீரென்று மரணம் அடைந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்த நிலையில் அவரது மரணம் அதிர்ச்சியாக அமைந்தது. கல்பனா நடிக்க வேண்டிய மீதி காட்சிகள் கிராபிக்ஸில் கச்சிதமாக செய்து முடித்ததுடன் வேறு ஒருவர் அவருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். படத்தை அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ளார். படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்