ஆப்நகரம்

நடிகர் சரத்குமார் போன் நம்பர் மற்றும் குரலை பயன்படுத்தி நடந்த மோசடி! போலீசில் புகார்

நடிகர் சரத்குமார் அவரது நம்பரில் இருந்தே அவருக்கு போன் கால் வந்ததால் அதிர்ச்சியாகி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

Samayam Tamil 31 Jul 2020, 9:40 am
சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. எப்போதாவது முக்கிய பிரபலங்கள் அதனால் பாதிக்கப்பட்டால் அதனை பற்றிய செய்திகள் பெரியளவில் பேசப்படுகின்றன. அந்த வரிசையில் தற்போது நடிகர் சரத்குமார் செல்போன் நம்பரை கொண்டு ஒரு நபர் மோசடி நடந்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Samayam Tamil Sarath kumar


சமீபத்திய வருடங்களில் திரைப்படங்களில் அதிகம் நடிக்காத சரத்குமார் தன்னுடைய அரசியல் கட்சியில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒன்றை நடத்தி வருகிறார் அவர்.

இந்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபர் சரத்குமாரின் செல்போன் எண்ணை போலியாக உருவாக்கி அதிலிருந்தே சரத்குமாருக்கு போன் செய்திருக்கிறார். தன்னுடைய நம்பரில் இருந்து தனக்கே கால் வந்ததை பார்த்து அதிர்ச்சியானார் சரத்குமார். அந்த நபருடன் பேசியிருக்கிறார். அவர் யார் என்ன வேலை செய்கிறார் என்பன போன்ற விவரங்களை கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த நபர் தான் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்றும் அங்கு மென்பொருள் பொறியாளராக பணியாற்றுவதாகவும் தெரிவிக்கிறார்.

இப்படி ஒரு போன் நம்பரை போலியாக உருவாக்குவதற்காக ஒரு சாப்ட்வேர் இருக்கிறது என்றும் அந்த நபர் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியான சரத் குமார் அந்த தொலை பேசி உரையாடல் ஆடியோ உடன் போலீசில் புகார் அளித்துள்ளார். அது பற்றி தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நபரிடம் எதற்காக இப்படி செய்தீர்கள் என சரத்குமார் கேட்ட போது நான் வேறொரு நம்பரில் இருந்து உங்களை அழைத்த போது நீங்கள் போனை எடுக்கவே இல்லை, அதனால் தான் உங்களிடம் பேசுவதற்காக உங்கள் நம்பரை உருவாக்கி அதிலிருந்து உங்களுக்கு போன் செய்தேன் என கூறி இருக்கிறார். இதைக் கேட்டு சரத்குமாருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

சரத்குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில் இது போன்ற அழைப்புகள் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இனி பஞ்சாயத்து ஷோவை நடத்தக் கூடாது: வனிதா

மேலும் இது போன்ற பல விதங்களில் மோசடி செய்து பேசும் நபர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சரத்குமாருக்கு அவரது நம்பரிலிருந்து போன் வருவதற்கு முன்பு மேலும் பல பிரபலங்களிடம் இருந்து இவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. பிரபலங்கள் பலரும் இவருக்கு போன் செய்து கேட்டு இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களிடம் பேசவே இல்லையே என சரத்குமார் விளக்கம் அளித்திருக்கிறார். இவருடைய குரலில் யாரோ ஒரு நபர் அவர்களிடம் பேசி இருக்கிறார் என்பது அப்போது தான் சரத்குமாருக்கு புரிந்திருக்கிறது. இது தொடர்ந்து நடந்ததால் தான் விபரீதம் புரிந்து போலீஸிடம் சென்றிருக்கிறார் சரத்குமார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் யார் என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நடிகர் ஒருவரிடமே இப்படி ஒரு நடைபெற்று இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்