ஆப்நகரம்

நிரந்தர நீக்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது : சரத்குமார்

நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

TNN & Agencies 27 Nov 2016, 8:05 pm
நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sarathkumar comment about nadigarsangam issue
நிரந்தர நீக்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது : சரத்குமார்


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக் குழு கூட்டம் இன்று மதியம் சென்னை திநகரில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நீரந்தரமாக நீக்கப்படுவதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அறிவித்தார்.

இதுகுறித்து கருத்து நடிகர் சரத்குமார் கூறும்போது," தற்காலிக நீக்கம் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் , நிரந்தர நீக்கம் என்பது சட்டத்திற்கு உட்பட்டது இல்லை . எனவே இதனை ஏற்றுக்கொள்ள இயலாது.

நடிகர் சங்கத்தின் இந்த முடிவை நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக தீர்வு காண்போம். மேலும் ரசிகர்களும் தொண்டர்களும் இந்த தருணத்தில் அமைதியாக இருக்க வேண்டும் " என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்