ஆப்நகரம்

New Education Policy: நடிகர் சூர்யாவின் கருத்தில் உடன்பாடில்லை - சரத்குமார்

புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தில், தனக்கு உடன்பாடில்லை என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jul 2019, 9:24 pm
நடிகர் சிவக்குமார் மாணவர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் நடிகர் சூர்யா நீட் தேர்விற்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் தனது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்திருந்தார். மத்திய அரசு கொண்டு வரும் கல்விக்கான புதிய வரைவுக் கொள்கை பற்றி பல கேள்விகளை முன் வைத்து, இதையெல்லாம் நாம் ஏன் பேசுவதில்லை. இதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இல்லையெனில் மொத்தமாக அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் இருண்டு போகும் என சூர்யா பொங்கி எழுந்தார்.
Samayam Tamil uriya


சூர்யாவின் இந்தப் பேச்சு இணையதளமெங்கும் விவாதத்தை துவக்கியது. அனைவரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து, அவர் அரசுக்கு எதிராக கேட்ட கேள்விகளை இணையம் வழியாக பரப்பி வருகிறார்கள். பிரபலங்கள் பலரும் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று நடந்த "காப்பான்" பட இசை வெளியீட்டில் பேசிய ரஜினியும் சூர்யாவின் பேச்சை ஆமோதித்தார்.

இந்த நிலையில் சென்னை பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில், கல்லீரல் நோய்க்கான புதிய மருத்துவ மையத்தை நடிகர் சரத்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறினார்.

மேலும் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கான பணியில் ஈடுபட்டிருந்ததால், புதிய கல்விக்கொள்கை பற்றிய கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை முழுவதுமாக நான் படிக்கவில்லை என்றும், கல்விக்கொள்கையை உருவாக்க கஸ்தூரி ரங்கன் போன்ற பலரின் முயற்சிகள் இருப்பதாகவும், கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை முழுவதுமாக படித்ததும், தனது கருத்தினை ஒரு வாரத்தில் வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்