ஆப்நகரம்

‘சென்னையில் ஒரு நாள் 2’ க்ரைம் படத்தில் சரத்குமார்!

‘சென்னையில் ஒரு நாள் 2’ க்ரைம் திரில்லர் படத்தில் நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

TNN 19 Apr 2017, 4:46 pm
‘சென்னையில் ஒரு நாள் 2’ க்ரைம் திரில்லர் படத்தில் நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.
Samayam Tamil sarathkumar play in chnnaiyil oru nall 2
‘சென்னையில் ஒரு நாள் 2’ க்ரைம் படத்தில் சரத்குமார்!


‘டிராபிக்’ என்ற படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப் படம் தமிழில் ‘சென்னையில் ஒருநாள்’ என்ற பெயரில் ரீமேக்கானது. தமிழில் சுமாரான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் சரத்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சென்னையில் ஒரு நாள் -2’ என பெயர் வைத்துள்ளனர்.இது முதல்பாகத்தின் தொடர்ச்சி கிடையாது. அந்தப்படத்தை போன்று ஒரு பரபரப்பான திரில்லர் படம் என்பதால் இந்த தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

படத்தில் சரத்குமாருடன் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ‘நிசப்தம்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் படத்தை ஜெபிஆர் இயக்குகிறார். படத்திற்கு ராண் இசையமைக்கிறார். படத்தை கல்பதரு பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்