ஆப்நகரம்

இரு வேடத்தில் நடிக்கும் சரத்குமார்!

நடிகர் சரத்குமார், ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.

TOI Contributor 10 Aug 2016, 5:08 pm
நடிகர் சரத்குமார், ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
Samayam Tamil sarathkumar will be acting in dual character
இரு வேடத்தில் நடிக்கும் சரத்குமார்!


சரத்குமார் தன் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடித்தாலும் மற்றவர்கள் படத்தில் ஹீரோ தவிர்த்த முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ‘நிமிர்ந்து நில்’, ‘காஞ்சனா’ படங்களை குறிப்பிடலாம். மலையாளம் மற்றும் கன்னடத்திலும் அப்படியே நடிக்கிறார்.நடிகர் சங்க பிரச்னை, சட்டசபை தேர்தல், கட்சி பணிகள் என்று திசை மாறிய சரத்குமார். இப்போது நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று மன்னர் காலத்திய தளபதி, மற்றொன்று நிகழ் காலத்திய பாடிபில்டர் என்று கூறப்படுகிறது. இதில் வைணவி ஷாண்டில்யா என்ற மராட்டிய நடிகை ஹீரோயின்.

இவர்களுடன் தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ், பிளேட் சங்கர், ஆர்ஜே விஜய் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இசைஅமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரிக்க சண்முகம் முத்துசாமி என்ற புதுமுகம் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்