ஆப்நகரம்

மூன்றே நாளில் ‘சர்கார்’ வசூலுக்கு ஆப்பு வைத்த ஆளுங்கட்சியினர்!

ஆளுங்கட்சியினர் அராஜகத்தால் மூன்றாவது நாள் ‘சர்கார்’ படத்தின் வசூல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 9 Nov 2018, 3:41 pm
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் மிகப் பிரம்மாண்டமாக வெளியான படம் ‘சர்கார்’. இந்தப் படம் தீபாவளியன்று வெளியானது.
Samayam Tamil sarkar


‘சர்கார்’ ரிலீஸிற்கு முன் கதை திருட்டு பிரச்சனை இருந்தது. அது ஒரு முடிவுக்கு வந்து தற்போது படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த நாளே தற்போதைய ஆளும் கட்சியினர் ‘சர்கார்’ படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று இல்லையெனில் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று கூறினர் . அடுத்தக்கட்டமாக நேற்று ஆளும் கட்சியினர் மதுரை, ஆரணி போன்ற இடங்களில் சர்கார் திரையிடும் திரையரங்குள் முன் வைத்திருந்த பேனர்கள், போஸ்டர்கள் எல்லாம் கிழித்து அராஜகம் செய்தனர்.

இதனால் மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் காம்ப்ளக்ஸில் உள்ள சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா என மூன்று திரையரங்குகளில் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல். அதேபோல் போராட்டம் அதிகமாக தெரியும் நிலையில் அங்கங்கே உள்ள சர்கார் திரையிடும் திரையரங்குகளும் காட்சிகளை ரத்த செய்து கொண்டு வருகிறார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்