ஆப்நகரம்

சர்கார் படத்தில் விஜய் முதல்வராக நடிக்க இதுதான் காரணமா?

நடிகர் விஜய், தற்போது நடித்து வரும் சர்கார் படத்தில், தனக்கு அரசாங்கம் வாக்களிக்கும் உரிமையை மறுத்தால், அதற்குப் பழி வாங்கவே முதல்வராக மாறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 28 Aug 2018, 6:48 pm
நடிகர் விஜய், தற்போது நடித்து வரும் சர்கார் படத்தில், தனக்கு அரசாங்கம் வாக்களிக்கும் உரிமையை மறுத்தால், அதற்குப் பழி வாங்கவே முதல்வராக மாறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil சர்கார் படத்தில் விஜய் முதல்வராக நடிக்க இதுதான் காரணமா?
சர்கார் படத்தில் விஜய் முதல்வராக நடிக்க இதுதான் காரணமா?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் மாறன், மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், படத்தின் இசை காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தில் நடிகர் விஜய் அமெரிக்கத் தொழிலதிபராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது படத்தின் கதைப் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொழிலதிபராக இருக்கும் விஜய், ஒரு சில காரணத்திற்காக இந்தியாவிற்கு வருகிறார். அவருக்கு ஒரு கட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுகிறது. அதைப் பெற முயற்சிக்கும் போது, அவருக்கான உரிமைகளை சிலர் பறிக்கின்றனர். இதற்குப் பழி வாங்கும் வகையில், நடிகர் விஜய்அவர்களுக்கே தலைவனாக, அதாவது முதல்வராக மாறுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தகவல் அதை மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்