ஆப்நகரம்

Sarkar :’சர்கார்’ படக்கதை என்னுடையது அல்ல- ஒப்புக்கொண்டார் ஏ.ஆர். முருகதாஸ்

சர்க்கார் படத்தில் வருண் ராஜேந்திரன் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி அளித்துள்ளார்.

Samayam Tamil 30 Oct 2018, 12:35 pm

சா்காா் படத்தின் கதை திருடப்பட்டதல்ல – ஜெயமோகன் விளக்கம்

சர்கார் முழுக்கதையை வெளியிட்ட பாக்யராஜ்: படக்குழுவினர் ‘ஷாக்’!

சர்கார் கதை திருட்டு விவகாரம்: விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு

சர்கார் கதைத்திருட்டு விவகாரத்தில் உண்மை தான் வெல்லும், வரலட்சுமி அதிரடி!

’சர்கார்’ படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையது தான் எனவும், படத்தின் துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு அவருடைய பெயர் வெளியிடப்படும் என ஏ.ஆர். முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Murugadoss.
’சர்கார்’ பட விவகாரத்தில் வருணுடன் ஏ.ஆர். முருகதாஸ் சமரசம்


முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படம் ’செங்கோல்’ படத்தின் கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி துணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வரும் 30ம் தேதிக்குள் முருகதாஸ் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.


இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குநர் முருகதாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.



மேலும், ’சர்கார்’ பட துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு வருண் ராஜேந்திரனின் பெயரை வெளியிடவும் நீதிமன்றத்தில் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக்கொண்டார். சமரசத்திற்கு வருண் ரூ.30 லட்சம் கேட்ட நிலையில், குறிப்பிட்ட அளவு பணம் தரப்படும் என ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்ட நிலையில், நீதிபதி அதை ஏற்றுக்கொண்டதாகவும், இதனால் ’சர்கார்’ கதை திருட்டு வழக்கு முடித்துவைக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்