ஆப்நகரம்

சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்: செயலாளர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் ராதாரவி நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.

TNN 27 Nov 2016, 6:06 pm
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் ராதாரவி நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.
Samayam Tamil sarthkumar radharavi permanently expelled from nadigar sangam secretary vishal
சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்: செயலாளர் விஷால்


சென்னை தி.நகரில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கப்படுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சங்க நிலத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், சங்க கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் செய்த காரணத்தால் சரத்குமார் மற்றும் ராதாரவி ஏற்கனவே தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொதுக்குழு விழாவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு தொடக்க விழாவும், 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும், மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனிடையே, பொதுக் குழு கூட்ட அரங்கிற்கு வெளியே, உறுப்பினர் அடையாள அட்டை இல்லாத நபர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முயற்சித்த சரத்குமார் ஆதரவாளர்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு கைகலப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனையடுத்து பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்