ஆப்நகரம்

டைட்டிலே இப்படியா? சர்ச்சைக்குள்ளாகும் சசிகுமாரின் எம்ஜிஆர் மகன்?

சசிகுமார் பொன் ராம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு எம்ஜிஆர் மகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Sep 2019, 6:21 pm
இயக்குநர் பொன்ராம் படங்கள் பெரும்பாலும் கிராமம்சார்ந்த கமர்ஷியல் படங்களாகவே இருக்கும். தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில், சீமராஜா மட்டும் வசூல் தோல்வியைத் தழுவியுள்ளது.
Samayam Tamil MGR Magan


இந்த நிலையில், தற்போது சசிகுமாருடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். எம்ஜிஆர் மகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி. இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர். சரவணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சித்தார்த், செந்தில்குமார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக பணிபுரியும் இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.


எம்ஜிஆருக்கு மகனோ அல்லது மகளோ இல்லாத நிலையில், இந்தப் படத்திற்கு எம்ஜிஆர் மகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால், சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரும் படங்கள் பெரும்பாலும் பழைய படங்களின் டைட்டில், நடிகர், நடிகைகளின் பெயர்களை சார்ந்தே அமைந்து சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்