ஆப்நகரம்

கொரொனா பரவும் நேரத்தில் இந்த போட்டோ அவசியம் தானா? தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட சதீஷ்

காமெடி நடிகர் சதிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். கொரோனா பரவும் இந்த நேரத்தில் இப்படி ஒரு போட்டோ அவசியமா என அவரே நக்கலாக கேட்டுள்ளார்.

Samayam Tamil 24 Mar 2020, 9:31 am
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் பரவி வரும் சூழ்நிலையில் தற்போது இந்தியா முடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ளது. அதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் யாரும் வீட்டுக்கு வெளியில் வர கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Sathish


மேலும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தாங்கள் செய்யும் விஷயங்களை சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர்.

வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து ஊறுகாய் போடுவது வரை பல நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் தான் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை மற்றவர்கள் யாரும் கிண்டல் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவரே கிண்டல் செய்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

"இந்த நேரத்துல இந்த போட்டோ அவசியம் தானா??" என அவரே கேட்டிருக்கிறார்.

View this post on Instagram Indha nerathula Indha photo avasiyam dhanaa..??🥴🤔😎🤓 A post shared by Sathish (@actorsathish) on Mar 22, 2020 at 11:14pm PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்