ஆப்நகரம்

SaveBharani கேம் விளையாடிய சிறுவர்கள்: நான் கெட்டவன் இல்லை தலைவா! கண்கலங்கிய பரணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய பரணி மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து கமலை சந்தித்து பேசினார்.

TNN 17 Jul 2017, 2:21 am
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய பரணி மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து கமலை சந்தித்து பேசினார்.
Samayam Tamil save bharani big boss unofficial game
SaveBharani கேம் விளையாடிய சிறுவர்கள்: நான் கெட்டவன் இல்லை தலைவா! கண்கலங்கிய பரணி


“பிக்பாஸ் தமிழ்” குடும்பத்திலிருந்து கடந்த வாரம் வெளியேறிய பரணியை அழைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைத்து கமல்ஹாசன் பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலில் அனைவரும் ஜூலியைத் தான் டார்க்கெட் செய்தார்கள். அப்போது அவர்களை எல்லாம் திருப்பி அடிக்குமாறு ஜூலிக்கு பரணி ஐடியா கொடுத்தார். அதன் பிறகு அனைவருக்குமே பிடிக்காதவராக பரணி உருவானார். கஞ்சா கருப்பு, சினேகன், காயத்ரி என்று அனைவரிடமும் சண்டை ஏற்பட்டது.



நாளடையில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் சண்டை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பியோட பரணி முயற்சித்தார். அதன் பின்னர் விதிமீறலுக்காக அங்கிருந்து பரணி வெளியேற்றப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வாரங்களுக்குப் பிறகு பிக்பாஸ் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி உலக நாயகன் கமலிடம் தெரிவித்தார். நான் இங்கிருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், என்னை வெளியேற்றினால் தான் மற்றவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடிப்பார்கள் என்றும், உண்ணாவிரதம் இருப்போம் என்றும் கூறியதாக பரணி தெரிவித்தார். மேலும், நான் வெளியில் இருக்கும் போது பள்ளிக்கு செல்லும் மாணவிகள் என்னை SaveBharani என்று வைத்துக் கொண்டு மற்றவர்கள் என்னை துறத்துவது போன்ற கேம் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.



அம்மா, அப்பாவுக்கு பிறகு உலக நாயகனான உங்களது காலில் விழுவதாக கூறினார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, பரணி நீங்கள் யார் வெற்றிபெறுவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்டார். அதற்கு நான் வெளியேறும் போது Bye Bharani என்று என்னை யார் சொன்னார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

பரணி பேசிய ஒவ்வொரு விஷயத்திற்கும் மேடையில் கை தட்டல்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்