ஆப்நகரம்

ஆதரவற்ற தெரு நாயை மீண்டும் தத்தெடுத்த நடிகை த்ரிஷா

ஆதரவற்ற பெண் நாய் ஒன்றை நடிகை த்ரிஷா தத்தெடுத்து, அதற்கு கேட்பரி என பெயர் வைத்துள்ளார்.

TNN 20 Apr 2017, 8:37 pm
சென்னை : ஆதரவற்ற பெண் நாய் ஒன்றை நடிகை த்ரிஷா தத்தெடுத்து, அதற்கு கேட்பரி என பெயர் வைத்துள்ளார்.
Samayam Tamil say hello to cadbury says trisha
ஆதரவற்ற தெரு நாயை மீண்டும் தத்தெடுத்த நடிகை த்ரிஷா


சில நாட்களுக்கு முன் அவர் வளர்த்து வந்த செல்ல நாய் கேட்பரி இறந்த போது, “உன்னுடன் சேர்ந்து என்னில் ஒரு பகுதியை அடக்கம் செய்கிறேன்” என டுவிட்டரில் தன் செல்லப்பிராணி இறந்தது குறித்து வேதனை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு ஆதரவற்ற பெண் நாயை தத்தெடுத்திருக்கும் சமந்தா அதற்கு, தன் பழைய இறந்த செல்ல நாயின் பெயரையே ‘கேட்பரி’ என வைத்துள்ளார். அதோடு “say hello to cadbury Jr.Krishnan” என டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

She found us❤️Striking resemblance 2 my late son n so shes named after him. Say hello 2 Cadbury Jr.Krishnan❤️🐕 #mydaughter #mylovebug pic.twitter.com/9opqfZ5aEx — Trisha Krishnan (@trishtrashers) April 20, 2017

ஆதரவற்றா விலங்குகளை பாதுகாத்து அடைக்கலம் தரும் த்ரிஷா, பீட்டா விலங்குகள் நல அமைப்பின் விளம்பரங்களில் விலங்குகளின் உரிமை குறித்தும் வலியுறுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்