ஆப்நகரம்

பாடல் காட்சியின் போது மயங்கி விழுந்த ‘வனமகன்’ நடிகை!

பாடல் காட்சியை படமாக்கியபோது ‘வனமகன்’ நடிகை சாயிஷா சைகல் மயங்கி விழுந்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2018, 4:51 pm
பாடல் காட்சியை படமாக்கியபோது ‘வனமகன்’ நடிகை சாயிஷா சைகல் மயங்கி விழுந்துள்ளார்.
Samayam Tamil 6


நடிகை சாயிஷா ‘வனமகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜூங்கா’ படத்தில் நடித்து வருகிறார். சாயிஷா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது குடும்பம் சினிமா துறையைச் சார்நதவர்கள் இவருடைய தாத்தா, பாலிவுட்டில் பெரிய நடிகர்.

அதுமட்டுமல்ல, இவருடைய பாட்டி, அப்பா, அம்மா எல்லாருமே பாலிவுட் நடிகர்கள்தான். இவர் முறைப்படி நடனம் கற்றுள்ளார். தன்னுடைய முதல் தமிழ்ப் படத்திலேயே இடுப்பை வளைத்து, நெளித்து ஆட்டி ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார்.

தற்போது இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜூங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படததின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வந்தது. அங்கு மைனஸ் 9 டிகிரியில் விஜய் சேதுபதி, சாயிஷா இருவரும் ஆடும் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். நடிகர் முதற்கொண்டு எல்லாரும் ஸ்வெட்டர் போட்டுக்கொள்ள, நடிகைக்கு மட்டும் தம்மாத்தூண்டு துணியை கட்டி வைத்து ஆடவைத்துள்ளனர். ஒருகட்டத்தில் குளிரைத் தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் நடிகை சாயிஷா.

பயந்துபோன படக்குழு அவசரம் அவசரமாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தமாகி இருக்கின்றனர். ஆனால், மீதமுள்ள காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு அப்புறமாக மருத்துவமனைக்கு போய்க் கொள்ளலாம் என்று சொன்ன நடிகை, ஹீட்டரில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு நடித்துக் கொடுத்தாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்