ஆப்நகரம்

வனமகளுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய விஜய்!

நடிகை சாயிஷா சைகலுக்கு தற்போது இயக்குனர் ஏ.எல். விஜய் புதிய அண்ணனாகியுள்ளார்.

TNN 8 Aug 2017, 4:29 pm
நடிகை சாயிஷா சைகலுக்கு தற்போது இயக்குனர் ஏ.எல். விஜய் புதிய அண்ணனாகியுள்ளார்.
Samayam Tamil sayesha saigal celiberate rakshabandan with al vijay
வனமகளுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய விஜய்!


நேற்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது. பெண்கள் அவர்களது சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி அவர்களின் அன்பைப் பெறும் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை வட இந்தியாவில் முக்கியமான பண்டிகையாகும்.

தற்போது இந்தப் பண்டிகை தென்னிந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. .பல பிரபலங்களும் நேற்று அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்கள். சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிரபலங்களின் ரக்ஷா பந்தன் புகைப்படங்கள் நிறைந்து காணப்பட்டது.

தமிழ் சினிமாவின் அடுத்த சிம்ரன் என புகழப்பட்ட ‘வனமகன்’ நடிகை சாயிஷா நேற்று ரக்ஷா பந்தனை இயக்குனர் விஜய்யுடன் கொண்டாடினார். ஏ.எல். விஜய் இயக்கிய ‘வனமகன்’ படத்தில்தான் சாயிஷா நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இனிய ரக்ஷா பந்தன், இன்றைய நாள் முழுவதையும் என்னுடைய அற்புதமான சகோதரர் விஜய்யுடன் கழித்தேன், அந்த மகிழ்ச்சியை அனுபவித்தேன்” எனக் குறிப்பிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்