ஆப்நகரம்

மாதவன் உண்மையை கண்டுபிடிப்பாரா? அனு கர்ப்பமாக இருப்பதை கேட்டு மாமியார் எடுக்கும் முடிவு!

Criminal Justice 2 கடந்த 24-ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியானது. தமிழில் டப் செய்யப்பட்டுள்ள இந்த வெப் சீரீஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் இரண்டாம் எபிசோட் இதோ.

Samayam Tamil 26 Dec 2020, 4:11 pm
அனுசந்திரா தனது கணவரை கத்தியால் குத்திவிட்டு பின் வெளியே சென்றுவிடுகிறார். அவர் நீண்ட நேரம் கழித்து தனது கணவரை மருத்துவமனையில் வந்து சந்தித்து சாரி சொல்கிறார். அங்கு வைத்து தான் அவரை கைது செய்கின்றனர். இதுகுறித்து தான் மீடியாக்களில் பேசுகிறார்கள். பிக்ரம் சிகிச்சை பெறும் அறையில் அவரது அம்மாவை மிகப்பெரிய வக்கீல் வந்து சந்திக்கிறார். இவர் பிக்ரமுக்கு பேமிலி பிரண்ட். பிக்ரம் அம்மா தனது பேத்தியை பார்க்க குழந்தைகள் காப்பகம் செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அனுவை பார்க்க அவரது அப்பா செல்கிறார். அவர் தான் ஒரு வக்கீலை பார்த்திருப்பதாகவும், அவர் சிறிது நேரத்தில் வருவார் என்றும் கூறுகிறார். திருமணம் ஆன அன்றே வேலைக்கான அழைப்பு வர மனைவியை விட்டுவிட்டு அனு வழக்கை விசாரிக்க மும்பை வருகிறார் வக்கீல் மாதவன். இவர் தான் அனு தரப்புக்கு ஆஜராக உள்ளார். இந்த வெப் சீரீஸின் நாயகன் என்றும் சொல்லலாம்.
Samayam Tamil Criminal Justice


இவர் நேராக இவரை வரவழைத்த உயர் அதிகாரி ஒருவரை சந்திக்கிறார். மொத்த வக்கீல்களுக்கும் எதிராக இந்த வக்கீலை தான் அந்த உயர் அதிகாரி வரவழைத்துள்ளார். மாதவனை மற்ற வக்கீல்கள் எதிராக தான் பார்ப்பார்கள். இவர் அப்படிப்பட்ட வழக்குகளை தான் எடுத்து நடத்துவார். அடுத்ததாக குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் அனுவின் மகள் ரியாவை அவரது பாட்டி அழைத்துச்செல்கிறார். அனுவை சந்திக்கும் மாதவன் வழக்கு குறித்து கேட்கிறார். ஆனால் அனு வாய் திறக்கவில்லை. மகளை பார்க்க வேண்டும் என்று மட்டும் சொல்கிறார். பிக்ரம் குறித்து எவ்வளவு கேட்டும் அனு எந்த பதிலையும் சொல்வதாய் இல்லை.

தொடரும் திரைக் கலைஞர்களின் மரணம் - நீரில் மூழ்கி அனில் நெடுமங்காடு உயிரிழப்பு!
பிக்ரம் வீட்டில் வேலை செய்யும் நபர்களிடம் போலீசார் விசாரணை செய்கின்றனர். அனு குறித்த தகவல்களை கேட்கிறார்கள். வக்கீல் மாதவன் அனுவின் அப்பாவிடம் விசாரிக்கிறார். இப்படி இந்த வழக்கு குறித்து பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. அனுவை மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்கின்றனர். அனுவை செக்ஸ் டார்ச்சர் செய்தாரா பிக்ரம் என்ற கோணத்திலும் விசாரணை செல்கிறது. மருத்துவமனையில் அனுவை முழு உடல் பரிசோதனை செய்கின்றனர். அவர் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு செக்ஸ் டார்ச்சர் செய்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் ரிப்போர்ட் வருகிறது. தனது பேத்தியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் பிக்ரம் அம்மா ரியாவை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் ரியா அழுது கொண்டே தனது அறையின் கதவை மூடிவிடுகிறார்.

மாதவன் பிக்ரமின் வாகன ஓட்டியுடன் பேச்சு கொடுத்து அனு யாரிடம் மனநல சிகிச்சை பெறுகிறார் என்று தெரிந்து கொள்கிறார். அவரை சந்திக்க செல்கிறார். அந்த மனநல மருத்துவர் வேறு யாரும் இல்லை, அனு முதல் காட்சியில் சந்தித்த அந்த நபர் தான். அவரிடம் அனு குறித்து விசாரிக்கிறார் மாதவன். எப்படியோ அவரிடம் பேசி அனுவின் மனநல பிரச்சனை குறித்து கடிதம் பெறுகிறார். மோக்ஸ் சிங்வி தான் அனுவின் மருத்துவர். நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. அனு மனநலம் சரியில்லாதவர் என்று கூறி ஜாமீன் கேட்கிறார் மாதவன். ஆனால் அனு தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாய் சொல்ல, அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. நீதிபதி மாதவன் மிஸ்ராவை கேலி செய்கிறார்.

சாரா அலிகானுடன் கொண்டாட்டத்தில் தனுஷ்!
அனுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறார் நீதிபதி. அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரை பெண் போலீஸ் சோதனை செய்து உள்ளே அனுப்புகிறார்கள். சிறையில் பெண் கைதிகளை பார்த்து மிரண்டு போகிறார் அனு. அவர் கர்ப்பமாக இருப்பதால் சிறப்பு சிறைக்கு அனுப்புகிறார்கள். அங்கு கர்ப்பிணி பெண் கைதிகள், கைக்குழந்தையுடன் கைதிகள் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த சிறையும் சுத்தமாக இல்லை. மருமகள் கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டு பிக்ரமின் அம்மா அந்த குழந்தை தனக்கு வேண்டும் என்று சொல்கிறார். சிறையில் அனு படும் அவஸ்தைகள் கொஞ்சம் காட்டுகிறார்கள். இப்படியாக இந்த எபிசோட் முடிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்