ஆப்நகரம்

பக்தியுடன் இதைச் செய்தால், கோபம் குறைந்துவிடும்; ரஜினி சொல்லும் எனர்ஜி ரகசியம்!

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கோபத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

Samayam Tamil 1 Apr 2019, 3:13 pm
பரமஹம்ச யோகானந்தர் எழுதிய புத்தகம் “ஒரு யோகியின் சுயசரிதம்”. இது பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. பழங்காலத்தில் வாழ்ந்த மெய் ஞானிகள், அவர்களின் மறைஞான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Rajinikanth


மேலும் யோகம் மற்றும் சித்திக்காக, அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நூல் அரிதான ஒன்று எனக் கூறப்படுகிறது.

இதன் ஒலி வடிவ பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய ரஜினிகாந்த், ”ஒரு யோகியின் சுயசரிதம்” என்ற புத்தகம் ஆன்மீக உலகை புரட்டி போட்டுள்ளது.

நம்பிக்கை, பக்தி உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கிறது. இந்தப் புத்தகத்தில் இருப்பதை பின்பற்றினால் கோபம் குறைந்துவிடும்.

வாழ்வின் துன்பம் இருக்காது என்று கூறினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் நிச்சயம் படியுங்கள். வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்