ஆப்நகரம்

சிவாஜி சிலையை அகற்றினால் போராடுவேன் -சீமான் எச்சரிக்கை

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை அகற்றினால் போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNN 21 Jul 2017, 1:47 pm
மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை அகற்றினால் போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil seeman was against moving the sivaji statue from marina to manimandabam
சிவாஜி சிலையை அகற்றினால் போராடுவேன் -சீமான் எச்சரிக்கை


மெரினாவில் உள்ள சிவாஜியின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதினால், அவரின் சிலையை அகற்ற வேண்டும் என்று நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சிவாஜியின் சிலையை தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட உள்ள மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது . ஆனால் இந்த முடிவை ஏற்றுகொள்ள முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது’’ சிவாஜியின் சிலையை மாற்றி அமைக்க வேண்டாம் . பல சாதனைகள் செய்து வரலாற்றை மாற்றிய விரமா முனிவர் , அண்ணா ஆகியோரின் சிலை மெரினாவில்தான் இருக்கிறது. அதேபோல் திரைத்துறையில் தனது நடிப்பால் பல சாதனைகள் செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் . மூலைக்கு மூலை டாஸ்மார்க் கடையை திறக்கும் தமிழக அரசு, அந்த கடைகள் அகற்ற வேண்டும் என்றால் மட்டும் ஏன் அகற்ற மறுக்கிறது. என்று கேள்வி எழுப்பினார். சிவாஜியின் சிலையை அகற்றினால் தேவையில்லாத போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் . இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டாலும் சரி இல்லை அறிவிப்பு என்று எடுத்துக்கொண்டாலும் சரி. என்று கூறினார்.

seeman was against moving the sivaji statue from marina to manimandabam

அடுத்த செய்தி

டிரெண்டிங்