ஆப்நகரம்

தம்பிக்கு புத்திமதி கூறிய செல்வராகவன்..?: முடிவில் பிடிவாதமாக இருந்த தனுஷ்!

கடந்த மாதம் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வாழ்க்கை சம்பந்தமான பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 19 Jan 2022, 5:54 pm
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Dhanush - Selvaraghavan
Dhanush - Selvaraghavan


இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், '18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்திருந்தனர்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்திற்கான பின்னணி என்ன..?: பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு குறித்து முன்பே இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதாவது கடந்த டிசம்பர் 3-ம் தேதி தனது ட்விட்டர் பதிவில், 'தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.


தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குமிடையேயான பிரச்னை உச்சத்தில் இருக்கும் போது தான் செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டிருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் அண்ணன் பேச்சை கேட்டு தனுஷ் அவசரப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். செல்வராகவன் சமீபகாலமாகமே வாழ்க்கை தத்துவமான பதிவுகளை அதிகமாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்