ஆப்நகரம்

தம்பிடா..! புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்: நெகிழ்ச்சியில் தனுஷ்!

நடிகர் தனுஷின் இயக்குனர் அவதாரத்தின் முதல் படைப்பான 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு ழுவீச்சில் நடைபெற்று வருவதைக் கண்டு இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

TNN 4 Oct 2016, 3:16 pm
சென்னை: நடிகர் தனுஷின் இயக்குனர் அவதாரத்தின் முதல் படைப்பான 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு ழுவீச்சில் நடைபெற்று வருவதைக் கண்டு இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil selvaraghavan blown away by dhanushs directorial debut
தம்பிடா..! புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்: நெகிழ்ச்சியில் தனுஷ்!


நடிகர் ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் 'பவர் பாண்டி' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அசுர வேகத்தில் நிறைவடைந்ததையடுத்து, இயக்குனர் செல்வராகவன் தனுஷை புகழ்ந்துள்ளார்.

Saw the rushes of #powerpaandi &blown away. So funny,magical &touchy. Proud of you @dhanushkraja and Rajkiran sir,you are simply superb. — selvaraghavan (@selvaraghavan) October 3, 2016 அவரது டுவீட்டில்,'மிகவும் நகைச்சுவையாக, மாயமாக, உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. தனுஷ் உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது. ராஜ்கிரண் சார் சூப்பர்' எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

செல்வராகவனின் டுவீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், 'மிக்க நன்றி.உங்களது புகழ்ச்சி எனக்கு மிகவும் ஆர்வமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. எல்லா புகழும் உங்களுக்கே' என்று கூறி தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

Thank you so much selva 🙏🙏🙏 I'm so excited and thrilled YOU liked the rushes. Ella pugazhum ungalukke https://t.co/6Uhr1MHWFe — Dhanush (@dhanushkraja) October 3, 2016 தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படப்பிடிப்பின் இடைவெளிக்கு நடுவே 'பவர் பாண்டி' படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். விரைவில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கொடி' திரைப்படம் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்