ஆப்நகரம்

மனைவியை அடுத்து செல்வராகவனுக்கும் கொரோனா

மனைவியை அடுத்து செல்வராகவனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Samayam Tamil 23 Jan 2022, 12:09 pm

ஹைலைட்ஸ்:

  • செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு
  • கீதாஞ்சலிக்கு ஓமைக்ரான் பாதிப்பு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil selvaraghavan
இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் தனக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தார். தன் செல்லமகள் லீலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதை நினைத்து வருத்தப்பட்டார்.
தன் அறையில் இருந்தபடியே பிறந்தநாள் பார்ட்டியை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இந்நிலையில் தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செல்வராகவன் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று காலை தெரிய வந்தது. கடந்த 2, 3 நாட்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள் தங்கள் டாக்டரை அணுகி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள். அனைவரும் மாஸ்க் அணியுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். அப்பா, அம்மா இரண்டு பேருக்குமே கொரோனா என்றால் 3 பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்