ஆப்நகரம்

சிம்புவின் அடுத்தப் படம் குறித்து முக்கிய அறிவிப்பு; மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர் பட்டாளம்!

சென்னை: சிம்புவின் அடுத்தப் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 9 Dec 2018, 6:32 pm
மணிரத்னம் இயக்கத்தில் ’செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Samayam Tamil Simbu


இப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டிற்கு பின், வெங்கட் பிரபு உடன் இணைந்து ’மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்தி என்னவென்றால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அன்றைய தினம் சிம்புவிற்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கியப் பதிவு ஒன்றை இட்டுள்ளார். காதலும், ஆக்‌ஷனும் கலந்த கலவையாக இளம் சூப்பர் ஸ்டார் சிம்புவின் ’மாநாடு’ உருவாகப் போகிறது.

ஆட்டத்திற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்