விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் தட்டிச் சென்றுள்ளார். விஜய் தொலைக்காட்ட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என்று இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், தற்போது இந்த நிகழ்ச்சியின் சூப்பர் சிங்கர் சீனியர் 6 சீசனுக்கான இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாடு அரங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சீதக்காதி படக்குழுவினருடன் கலந்து கொண்டார்.
மொத்தம் 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அனிருத், மாளவிகா, ரக்ஷிதா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பாடல்கள் பாடினர். இறுதியில், சூப்பர் சிங்கர் 6 சீசனுக்கான டைட்டிலை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் தட்டிச் சென்றுள்ளார். இதில், 50 லட்சத்துக்கான சொகுசு பங்களா பரிசாக அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2வது இடத்தை ரக்ஷிதா தட்டிச் சென்றார். இவருக்கு ரூ.25 லட்சம் பரிசளிக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து, மாளவிகா 3ம் இடத்தைப் பிடித்தார். இவருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ஸ்ரீகாந்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மொத்தம் 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அனிருத், மாளவிகா, ரக்ஷிதா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பாடல்கள் பாடினர். இறுதியில், சூப்பர் சிங்கர் 6 சீசனுக்கான டைட்டிலை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் தட்டிச் சென்றுள்ளார். இதில், 50 லட்சத்துக்கான சொகுசு பங்களா பரிசாக அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2வது இடத்தை ரக்ஷிதா தட்டிச் சென்றார். இவருக்கு ரூ.25 லட்சம் பரிசளிக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து, மாளவிகா 3ம் இடத்தைப் பிடித்தார். இவருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ஸ்ரீகாந்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.