ஆப்நகரம்

சீரியல் நடிகர் அமித் பார்கவுக்கு இப்படி ஒரு ஆசையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை நாடகத்தின் கதாநாயகர் அமித் பார்கவின் மனைவிக்கு சமீபத்தில் சீமந்தம் நடந்தள்ளது. இந்நிலையில் பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கவேண்டும் என்பதே தனது ஆசை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Mar 2019, 4:05 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை நாடகத்தின் கதாநாயகர் அமித் பார்கவின் மனைவிக்கு சமீபத்தில் சீமந்தம் நடந்தள்ளது. இந்நிலையில் பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கவேண்டும் என்பதே தனது ஆசை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 68219023


விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த அமித் பார்கவ் மற்றும் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீரஞ்சனி கர்பமாக இருப்பதாகவும், குழந்தைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகை ஸ்ரீரஞ்சனிக்கு சீமந்தம் நடைபெற்றது. இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரீரஞ்சனி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு விஷயத்தையும் அமித் கூறியுள்ளார். விஸ்வாசம் படத்தில் ஹிட் ஆன ’கண்ணான கண்ணே’ பாடலை தினமும் குழந்தைக்கு அருகில் சென்று பாடுகிறாராம். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை அதை கேட்டு தான் தினமும் தூங்குகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்