ஆப்நகரம்

சின்னத்திரையில் முதன்முறையாக ஆணாக நடிக்கும் நடிகை ஆயிஷா!

நடிகை ஆயிஷா, முதன் முறையாக சின்னத்திரையில் ‘சத்யா’ என்னும் தொடரில் ஆணாக நடிக்கிறார்.

Samayam Tamil 28 Jan 2019, 4:52 pm
சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆயிஷா. இவர் ‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இவர் விலகினார். பின்னர் ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார். தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil aysha


இந்தத் தொடரில் நடிகை ஆயிஷா ஆணாக நடிக்கிறார். வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா ஆணாக நடிக்கிறார். இதற்காக தன் உடல் எடையையும் குறைத்திருக்கிறார். சீரியலின் தொடக்கத்தில் ஆணாக அறிமுகமாகி அதன் பிறகு மெல்ல மெல்ல பெண்ணாக மாறுகிற மாதிரியான கதையாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்