ஆப்நகரம்

சாக்கடையில் கிடந்த ஆண் குழந்தையை வளர்க்க விரும்பும் பிரபல டிவி நடிகை!

சாக்கடையில் கிடந்த ஆண் குழந்தையை எடுத்து அதை தானே வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் டிவி நடிகை கீதா.

Samayam Tamil 17 Aug 2018, 6:12 pm
சாக்கடையில் கிடந்த ஆண் குழந்தையை எடுத்து அதை தானே வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் டிவி நடிகை கீதா.
Samayam Tamil PAY-Baby-found-abandoned-on-doorstep


சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை கீதா. அவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் மழைநீர் சாக்கடையில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் அனாதையாக கிடந்தது. அந்த குழந்தையை பலரும் பார்த்து விட்டு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். உடனே நடிகை கீதா சாக்கடையில் இருந்து குழந்தையை மீட்டார்.

பின்னர் அந்த குழந்தையை நன்றாக வெந்நீரில் குளிப்பாட்டினார். பின்னர்தான் தெரிந்தது அது ஆண் குழந்தை என்று. பின்னர் அந்த குழந்தையை காவல் துறையினர் உதவியுடன் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்தார்.

நடிகை கீதா தற்போது, தனது மகளுக்கு திருமணமாகி 7 வருடங்களாக குழந்தை இல்லாததால் இந்த குழந்தையை தானும் தனது மகளும் வளர்க்க ஆசைப்படுவதாகவும், தங்களுக்கு குழந்தை கிடைக்குமேயானால் அதை நல்ல முறையில் வளர்ப்பதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்