ஆப்நகரம்

ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை புகார்!

ஆபாசமாக வீடியோ எடுத்து தன்னை மிரட்டுவதாக வடபழனி காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 22 Sep 2019, 6:18 pm
சென்னை, வடபழனி ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஜெனிஃபர். இவர், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில், நேற்று வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பக்ருதீன் என்பவர் அறிமுகமானார். இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், என்னை காதலிப்பதாக கடந்த வருடம் கூறினார்.
Samayam Tamil Jenifer


இதன் காரணமாக, நானும், அவருடன் நெருங்கி பழகினேன். அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு என்னை மிரட்டி வருகிறார். இதற்கு முன்னதாக புழல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பக்ருதீன் குறித்து புகார் அளித்திருந்தேன். அவர்களும், விசாரித்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தற்போது மீண்டும் என்னை, வீடியோ காட்சிகளை வைத்துக் கொண்டு மிரட்டி வருகிறார். என்னிடம் பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், வீட்டிற்கு வந்து எனது அம்மாவையும் கொலை செய்துவிடுவதாக கூறிகிறார். இதன் காரணமாக, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். இதையடுத்து, பக்ருதீன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்