ஆப்நகரம்

போலீஸ் உடையில் சீறிய சீரியல் நடிகை நிலானி அதிரடி கைது!!

தூத்துக்குடி துப்பாகிச்சூடு தொடர்பாக வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானியை வடபழனி போலீஸார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 20 Jun 2018, 5:12 pm
தூத்துக்குடி துப்பாகிச்சூடு தொடர்பாக வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானியை வடபழனி போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil போலீஸ் உடையில் சீறிய சீரியல் நடிகை நிலானி அதிரடி கைது!!
போலீஸ் உடையில் சீறிய சீரியல் நடிகை நிலானி அதிரடி கைது!!


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக தமிழ் சீரியல் நடிகை நிலானி என்பவர், மாநில அரசையும் காவல் துறையின் வன்முறையையும் கண்டித்து வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் அவர், காக்கி உடை அணிவது மிகவும் வெட்கக்கேடானது என்றும், கேவலம் என்றும் கூறினார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் வடபழனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், குன்னூரில் தங்கியிருந்த நடிகை நிலானியைக் வடபழனி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்