ஆப்நகரம்

10 வருடங்கள் கழித்து சின்னத்திரையில் தோன்றும் பிரபல நடிகை!

சினிமாவை விட்டுச் சென்ற பிரபல நடிகை நதியா, 10 வருடங்கள் கழித்து தற்போது சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 20 Mar 2019, 5:55 pm
ஒரு காலத்தின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நதியா. மலையாள நடிகையான இவர் ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை நதியா தமிழ் சினிமாவில் பல மறக்கமுடியாத படங்களில் நடித்தவர்.
Samayam Tamil nadhiya


விளம்பரங்களிலும் அவரை காண முடிகிறது. ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். கடந்த 2009 ல் ‘பட்டாளம்’ படத்திற்கு பின் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

தற்போது 10 வருடம் கழித்து தமிழில் சின்னத்திரையில் முக்கிய சீரியலான ‘ரோஜா’வில் நடித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்