''பாரத் மாதா கி ஜெய்'' என்று சொல்ல அசாதுதின் ஒவைசிக்கு விருப்பம் இல்லாவிட்டால் ''பாரத் அம்மி கி ஜெய்'' என்று கூறுவாரா? என்று நடிகை ஷபனா ஆஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இந்திய டுடே சார்பில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு ஷபனா ஆஸ்மி பேசுகையில், ''நான் ஓவைசியைப் பார்த்து ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன். அவருக்கு ''பாரத் மாதா கி ஜெய்'' என்று சொல்ல விருப்பம் இல்லாவிட்டால் ''பாரத் அம்மி கி ஜெய்'' என்று கூற விருப்பமா? மாதா என்று கூறமாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால், பாரத் என்று கூறுவதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை'' என்றார்.
இவருடன் இந்த விழாவிற்கு வந்திருந்த அவருடைய கணவரும், எழுத்தாளருமான ஜாவெத் அக்தர் கூறுகையில், ''நாட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும், ஒவைசியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன். ஆனால், ஐதராபாத்தில் மட்டும் போட்டியிட மாட்டேன். ஏனென்றால் அங்கு 50 சதவீதம் முஸ்லிம்கள். 50 சதவீதம் இந்துக்கள்'' என்று தெரிவித்தார்.
''என் கழுத்தில் கத்தியே வைத்தாலும், பாரத் மாதா கி ஜெய் என்று கூற மாட்டேன் என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டேஹதுல் முஸ்லிமீன் (ஐஎம்ஐஎம்) தலைவர் ஒவைசி கூறியிருந்தார். இந்நிலையில் ஷபனா ஆஸ்மி அவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய டுடே சார்பில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு ஷபனா ஆஸ்மி பேசுகையில், ''நான் ஓவைசியைப் பார்த்து ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன். அவருக்கு ''பாரத் மாதா கி ஜெய்'' என்று சொல்ல விருப்பம் இல்லாவிட்டால் ''பாரத் அம்மி கி ஜெய்'' என்று கூற விருப்பமா? மாதா என்று கூறமாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால், பாரத் என்று கூறுவதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை'' என்றார்.
இவருடன் இந்த விழாவிற்கு வந்திருந்த அவருடைய கணவரும், எழுத்தாளருமான ஜாவெத் அக்தர் கூறுகையில், ''நாட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும், ஒவைசியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன். ஆனால், ஐதராபாத்தில் மட்டும் போட்டியிட மாட்டேன். ஏனென்றால் அங்கு 50 சதவீதம் முஸ்லிம்கள். 50 சதவீதம் இந்துக்கள்'' என்று தெரிவித்தார்.
''என் கழுத்தில் கத்தியே வைத்தாலும், பாரத் மாதா கி ஜெய் என்று கூற மாட்டேன் என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டேஹதுல் முஸ்லிமீன் (ஐஎம்ஐஎம்) தலைவர் ஒவைசி கூறியிருந்தார். இந்நிலையில் ஷபனா ஆஸ்மி அவ்வாறு கூறியுள்ளார்.