ஆப்நகரம்

பெண்களை துன்புறுத்தினால் தலையை வெட்டிவிடுவேன்: மகன்களுக்கு ஷாருக் எச்சரிக்கை

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பெங்களூரு மானபங்கம் சம்பவம் குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வன்மையாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

FEMINA 16 Jan 2017, 5:41 pm
மும்பை: நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பெங்களூரு மானபங்கம் சம்பவம் குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வன்மையாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil shah rukh khan says he will behead aryan and abram if they hurt a woman
பெண்களை துன்புறுத்தினால் தலையை வெட்டிவிடுவேன்: மகன்களுக்கு ஷாருக் எச்சரிக்கை


ஆண்கள் பெண்களை மதித்து, அவர்களிடம் கண்ணியமாக நடந்துக் கொள்ளவது முக்கியம் என்று ஷாருக்கான் வலியுறுத்தியுள்ளார். ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் கான் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையான ஷாருக்கான், சிறுவர்களாக இருக்கும் தனது மகன்களுக்கும் இந்த அறிவுரையை கூறியுள்ளார்.

ஃபெமினா நடத்திய நேர்காணலில் பங்கேற்ற ஷாருக்கான், இச்சம்பவம் குறித்து பேசுகையில்,'எனது மகன்கள் ஆர்யம் மற்றும் ஆப்ராம் இருவரிடத்திலும் ஒருபோதும் பெண்களை துன்புறுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறேன். அப்படி துன்புறுத்தினால், அவர்கள் தலையை வெட்டிவிடுவேன். பெண்ணுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்' என கூறியிருப்பதாக ஷாருக் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான், அக்ஷய்குமார், ஆமிர்கான், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பல பிரபலங்கள் பெங்களூரு மானபங்க சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தனர். திரை பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.

Shah Rukh Khan has spoken vehemently against the Bengaluru molestations that sent shockwaves around the country. The actor has time and again, stressed on the importance of men respecting women and treating them with dignity. Shah Rukh said, "I tell Aryan and even AbRam never hurt a woman. If you do, I'll behead you".

அடுத்த செய்தி

டிரெண்டிங்