ஆப்நகரம்

Pathaan: அடேங்கப்பா.. சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படத்தின் ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிகளா.?

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 28 Dec 2022, 7:46 pm
ஷாருக்கானின் 'பதான்' படத்திலிருந்து அண்மையில் பாடல் ஒன்று வெளியானது. இந்தப்பாடல் கடும் சர்ச்சைகளை கிளப்பியதுடன் 'பதான்' படத்தையே தடை செய்ய வேண்டும் என ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் செய்தனர் சில வலதுசாரிகள். இந்நிலையில் 'பதான்' ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil பதான்
பதான்


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அண்மையில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தப்படத்திலிருந்து 'பேஷ்ரம் ரங்' என்ற பாடல் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் போட்ட இந்தப்பாடலின் வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலானது.

சில நாட்களில் பல மில்லியன் பார்வைகளை கடந்து இப்பாடல் டிரெண்டிங்கில் கலக்கியது. இந்நிலையில் இப்பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறமும், பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள 'பேஷ்ரம் ரங்' என்ற வார்த்தைகளும் சர்ச்சைகளை கிளப்பின. 'பேஷ்ரம் ரங்' என்றால் 'வெட்கமற்ற நிறம்' என்று அர்த்தம்.

Ponniyin Selvan 2: 'பொன்னியின் செல்வன் 2' இவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் ஆகுதா.?: அதிரடி அறிவிப்பு.!

இந்தப்பாடலின் முடிவில் காவி நிற நீச்சல் உடை ஒன்றை அணிந்து வருவதும், ஷாருக்கான் பச்சை நிற சட்டை அணிந்ததும் சர்ச்சைகளை கிளப்பியது. மேலும், இந்த பாடலின் காட்சியில் காவி நிறத்திலான கவர்ச்சி உடையில் தீபிகா படுகோன் காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் 'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பதான்' படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Varisu: இதனால தான் அவர் தளபதி: விஜய்யின் செயலால் சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்