ஆப்நகரம்

பாவாடை, தாவணி அணிய விரும்பும் ஷாலினி பாண்டே

கிராமத்து பெண்கள் போல் பாவாடை, தாவணி அணிய விருப்பம் இருப்பதாக நடிகை ஷாலினி பாண்டே கூறியிருக்கிறார்.

Samayam Tamil 22 Apr 2018, 4:07 pm
கிராமத்து பெண்கள் போல் பாவாடை, தாவணி அணிய விருப்பம் இருப்பதாக நடிகை ஷாலினி பாண்டே கூறியிருக்கிறார்.
Samayam Tamil Arjun-Reddy-Movie-Actress-Shalini-Pandey-Hot-Latest-Photoshoot-Images2


நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானார். தற்போது தமிழில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100 சதவீதம் காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ஜீவாவின் ஜோடியாக ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தாய்லாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஷாலினி பாண்டே விரும்பம் தெரிவித்துள்ளார். “எனக்குத் தமிழ் கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும். தமிழ்நாட்டு கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி, சேலை அணிந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறேன்.” என்று ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்