ஆப்நகரம்

கூடிய விரைவில் முடிவுக்கு வரும் ஷங்கர் - வடிவேலு பிரச்னை!

வடிவேலு - இயக்குனர் ஷங்கர் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 26 Jun 2018, 4:41 pm
வடிவேலு - இயக்குனர் ஷங்கர் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil imsai arasan


நடிகர் வடிவேலு நடிப்பில் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான படம் ‘இம்சை அரசன் 23ம் புலிக்கேசி’. தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகி வந்தது. இந்தப் படத்திற்கு ‘இம்சை அரசன் 24ம் புலிக்கேசி’ என்று பெயர் வைத்திருந்தனர். இதிலும் வடிவேலு ஹீரோவாக நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாள் நடந்த வந்த நிலையில் திடீரென்று தயாரிப்பு நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் பிரச்னை எழுந்தது. இதையடுத்து தொடர்ந்து படத்தில் நடிக்க மறத்துவிட்டார் வடிவேலு.

இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. வடிவேலு முறைப்படி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராததால் சுமார் ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனை அவரிடமிருந்து சங்கம் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டது.

இதன் மீது இருதரப்பிலும் கருத்து கேட்டு பிரச்னைக்கு முடிவு காண முயன்றனர் சங்கத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. பிரச்னை தீராமல் தொடர்ந்து நீடித்து வந்தது. தற்போது வடிவேலு படப் பிடிப்பில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இதையடுத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருப்பதாக சங்கத் தரப்பினர் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்