ஆப்நகரம்

ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா..?: தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்திய ஷங்கர்!

ராம் சரண் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

Samayam Tamil 20 Jan 2022, 7:56 am
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்படத்தை முழுவதுமாக முடிக்காமல், ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார் ஷங்கர். இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil Shankar - Ram Charan
Shankar - Ram Charan


'இந்தியன் 2' படத்தை முடிக்காமல், வேறு படங்களைத் தொடங்கக் கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஷங்கருக்குத் தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பினை தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக இறங்கினார் ஷங்கர்.

தில் ராஜ் தயாரிப்பில் ராம்சரண் நடிப்பில் தனது அடுத்த படத்தை பிரம்மாண்டமாக இயக்கவுள்ளார் ஷங்கர். . தமிழ், தெலுங்கு, இந்தி என பான் - இந்தியா படமாக இந்த படம் உருவாகிறது. தில் ராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் 50 படம் இது என்பதால், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

நடிகை விஜயலட்சுமி தற்கொலை விவகாரம்: ஹரி நாடார் மீண்டும் கைது!
'ஆர்சி15' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தமன் இசையமைக்கிறார். ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக கியாரா அத்வானியும், மற்றொரு நாயகியாக அஞ்சலியும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஷங்கர் ரூ.23 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தெலுங்கு திரையுலகினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்பாடல் பற்றிய எதிர்பார்ப்பு இப்பொழுதே ரசிகர்களை தொற்றி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்