ஆப்நகரம்

பிச்சை எடுக்கும் இயக்குனர் ஷங்கர் பட காமெடி நடிகர்!

இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘காதல்’ படத்தில் நடித்த காமெடி நடிகர் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார்.

TOI Contributor 18 Jun 2017, 1:11 pm
இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘காதல்’ படத்தில் நடித்த காமெடி நடிகர் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார்.
Samayam Tamil shankars kadhal film comedy actor pallu babu is begger now
பிச்சை எடுக்கும் இயக்குனர் ஷங்கர் பட காமெடி நடிகர்!


‘காதல்’ படத்தில் ஒரு காமெடி நகைச்சுவையில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் பல்லு பாபு, மனநலம் பாதித்து, சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருவது தெரியவந்துள்ளது.

‘காதல்’ படத்தில் விருச்சகாந்த் என பெயர் வைத்துக்கொண்டு,.. நடிச்சா ஹீரோ சார்.. நான் வெய்ட் பன்றேன் சார். முதல்ல சினிமா. அப்புறம் அரசியல்.. அப்புறம் பி.எம்” என அவர் பேசிய வசனத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், அந்தப் படத்துக்குப் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அப்போது அவர் கூட நடிக்க வந்தவர்தான் யோகி பாபு. அவர் தற்போது முன்னணி காமெடி நடிகனாக கலக்கி வருகிறார்.

நடிகர் பல்லு பாபு, சென்னை சூளை பகுதியில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அந்த கோவிலில் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே கிடக்கிறார் பல்லு பாபு. மேலும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் அவர் பேசுகிறாராம். அந்தப் பகுதி மக்கள் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Shankar’s Kadhal film comedy actor Pallu babu is begger now!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்