ஆப்நகரம்

2 வருடமாக காத்திருக்கும் சாந்தனு பட தயாரிப்பாளர்! நாளை லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ள அறிவிப்பு

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் இராவண கோட்டம் படம் பற்றிய முக்கிய தகவல் நாளை வெளியிடப்பட உள்ளது.

Samayam Tamil 6 Aug 2020, 7:17 pm
நடிகர் சாந்தனு தற்போது தன்னுடைய கைவசம் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் என்ற படத்தின் ஷூட்டிங் சென்ற வருடம் துவங்கியது.
Samayam Tamil Shanthanu Bhagyaraj


அந்த படத்தின் ஷூட்டிங் மிக கடுமையான கோடை காலத்தில் மட்டுமே நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது என்பது சென்ற வருடத்தை தொடர்ந்து இந்த வருடம் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாளை படம் பற்றிய முக்கிய அறிவிப்பு இன்றை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளார் என அறிவித்திருக்கிறார்கள்.


இந்த படம் பற்றி தற்போது வெளியாகி உள்ள அறிக்கையில் தயாரிப்பாளர் கூறி இருப்பதாவது..

"பொறுமையும்‌ விடாமுயற்சியும்‌ எத்தகைய தடைகளையும்‌ தகர்த்தெறிந்து இடையூறுகளை இல்லாமல்‌ செய்யும்‌ அதிசயத்தை நிகழ்த்தும்‌" என்ற ஊக்கமளிக்கும்‌ உன்னதமான பொன்மொழி எப்போதுமே எனக்கு மிகவும்‌ பிடிக்கும்‌. இதன்‌ தாக்கம்‌ எனது தயாரிப்பிலும்‌ சிறப்பாக வெளிப்படுகிறது. கடந்த ஆண்டே 'இராவண கோட்டம்‌' படத்தை ஆரம்பித்து விட்டோம்‌. செயல்‌ வடிவம்‌ கொடுத்து படத்தை உருவாக்க எங்கள்‌ குழுவில்‌ உள்ள ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ அதிக பட்ச உழைப்பைக்‌ கொடுத்து பணியாற்றுகின்றனர்‌."

"விக்ரம்‌ சுகுமாரனின்‌ வலுவான ஸ்க்ரிப்ட்‌, சாந்தனு பாக்கியராஜ்‌ போன்ற திறமை மிக்க நட்சத்திரங்கள்‌ மற்றும்‌ அர்ப்பணிப்புடன்‌ பணியாற்றும்‌ தொழில்‌ நுட்பக்‌ கலைஞர்கள்‌, ஆகியவற்றுடன்‌ எங்கள்‌ பயணத்தைத்‌ தொடங்கினோம்‌. ஆண்டுக்கு மூன்று மாதங்களே இருக்கும்‌ கடுமையான கோடை கால சூழலில்‌ முழுக்‌ கதையும்‌ நடைபெறும்‌ வகையில்‌ படத்தின்‌ களம்‌ அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள்‌ படப்பிடிப்பைத்‌
தொடங்கியபோது மிகவும்‌ சாதகமான தட்ப வெட்ப சூழலே நிலவியதால்‌ மழைக்காலம்‌ ஆரம்பிக்கும்‌ முன்பே நாங்கள்‌ படப்பிடிப்பை முடித்து விட்டோம்‌. அவசரத்தில்‌ அள்ளித்‌ தெளித்த கோலமாகிவிடக்கூடாது என்பதிலும்‌, படத்தின்‌ உள்ளார்ந்த சாராம்சத்தை சிதைத்து விடக்கூடாது என்பதிலும்‌ கவனமாக இருந்தோம்‌."

"ஆயினும்‌ இந்த ஆண்டு இதே பருவத்தில்‌ படப்பிடிப்பைத்‌ தொடர திட்டமிட்டிருந்தபோது, உலகையே நிலைகுலையச்‌ செய்த 'கோவிட்‌ 19' பெருந்தொற்றால்‌ அது முடியாமல்‌ போனது. தற்போதைய வியாபார சூழலை நான்‌ நன்கு அறிந்திருக்கிறேன்‌ என்றாலும்‌, சாந்தனு மற்றும்‌ விக்ரம்‌ சுகுமாரன்‌ திறமை மீது கொண்ட முழு நம்பிக்கை காரணமாக இந்தப்‌ படத்தில்‌ முதலீடூ செய்து, படத்தை எடுக்க இருக்கிறேன்‌. சுமூகமான சூழல்‌ ஏற்பட்ட பிறகு அரசின்‌ அனுமதி கிடைத்ததும்‌, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ நாங்கள்‌ படப்பிடிப்பைத்‌ தொடரவிருக்கிறோம்‌. மேலும்‌ சாந்தனு தற்போது கைவசம்‌ வைத்திருக்கும்‌ நம்பிக்கைக்குரிய படங்கள்‌, நட்சத்திர ஏணியில்‌ அவரது கிராப் சீராக மேல்‌ நோக்கி செல்ல உதவும்‌ என்பதால்‌ எனது 'இராவண கோட்டம்‌' படத்துக்கு அது பெரிதும்‌ பயன்படும்‌" என்றார்‌.


படம் பற்றி பேசிய சாந்தனு தயாரிப்பாளருக்கு நன்றி கூறி உள்ளார். "படத்தயாரிப்பு தாமதமாகி நீண்ட போதிலும்‌, பொறுமை காக்கும்‌ அவர்‌, எங்களிடம்‌ "அவசரம்‌ காட்ட வேண்டாம்‌ சிறப்பான முறையில்‌ படத்தை உருவாக்குங்கள்‌" என்றுதான்‌ சொல்கிறார்‌. தற்போது சூழ்நிலை காரணமாக நாங்கள்‌ அமைதி காத்து வருகிறோம்‌. 'இராவண கோட்டம்‌' படத்தைத்‌ தொடங்கும்போது கண்ணன்‌ ரவி சார்‌ இனி உனக்கு நல்ல படவாய்ப்புகள்‌ நிறைய வரும்‌ என்று என்னிடம்‌ சொன்னார்‌. அவர்‌ சொன்னதைப்‌ போலவே 'இராவண கோட்டம்‌' படம்‌ வெளியாவதற்கு முன்பே, மணி ரத்னம்‌ சாரின்‌ 'வானம்‌ கொட்டட்டும்‌, விஜய்‌ அண்ணாவின்‌ 'மாஸ்டர்‌., மற்றும்‌ அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்‌ வெளியாகவிருக்கும்‌ சில படங்கள்‌ எனக்குக்‌ கிடைத்தது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது."

இப்போது எனக்கு அவர்‌ அதிர்ஷ்ட தேவதையாகத்தான்‌ கண்ணுக்குத்‌ தெரிகிறார்‌. அது மட்டுமல்ல, "இராவண கோட்டம்‌' படத்திலிருந்து எனக்கு எந்த லாபமும்‌ வேண்டாம்‌. தொடர்ந்து நல்ல படங்களைத்‌ தயாரிக்க நான்‌ போட்ட முதலீடு மட்டும்‌ திரும்ப வந்தால்‌ போதும்‌" என்று அவர்‌ உறுதிபடக்‌ கூறிவிட்டார்‌" என சாந்தனு கூறி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்