ஆப்நகரம்

இன்னும் பானி பூரி கடை கூட்டமா தான் இருக்கு.. மாஸ்டர் பட நடிகரின் கோபமான பேச்சு

கொரோனா வைரஸ் பற்றி எந்த பயமும் இல்லாமல் படித்தவர்களே வெளியில் சுற்றிக்கொண்டிருப்பது பற்றி சாந்தனு கோபத்துடன் ட்விட்டரில் பேசியுள்ளார்.

Samayam Tamil 24 Mar 2020, 8:50 am
கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று மாலை சென்னையில் இருந்து வெளியேற பேருந்து நிலையத்தில் பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். பேருந்து சேவை அதிகம் இல்லை என்பதால் பேருந்தின் கூரைகள் மீதும் அமர்ந்து சென்றனர் அவர்கள்.
Samayam Tamil Shanthanu and Vijay in Master


மக்கள் இடைவெளி கடைபிடிக்காமல் இப்படி அதிக கூட்டம் கூடியது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி கொரோனா பற்றி எந்த கவலையும் இன்று சாலைகளில் அதிகம் பேர் உலவுவதை பற்றி நடிகர் சாந்தனு ட்விட்டரில் கோபத்துடன் பேசியுள்ளார்.

பானி பூரி கடை மற்றும் பீடா கடைகள் தற்போதும் கூட்டமாக தான் இருக்கிறது என சாந்தனு குற்றம்சாட்டி உள்ளார்.

"மக்களே தயவுசெய்து டவெளியில் சுற்றுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு கொரோனா வராது என நினைக்காதீர்கள். SOCIAL DISTANCING பற்றி அனைவருக்கும் சொல்லுங்கள். தற்போதும் பானி பூரி கடை மற்றும் பீடா கடைகளில் அதிகம் கூட்டம் இருக்கிறது என சொல்கிறார்கள். இன்று முதல் தேவையின்றி வெளியில் சுற்றினால் போலீஸ் உங்களை அடிக்கப்போகிறது."

"உங்களை மட்டும் நீங்கள் பிரச்சனைக்கு உட்படுத்தவில்லை, மற்றவர்களின் வாழ்க்கையும் சிக்கலாகிறது. படிப்படிவில்லாதவர்கள், தினக்கூலிகள் இதை செய்தால் ஆச்சர்யமில்லை, ஆனால் அதிகம் படித்தவர்களே ரோட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து வீட்டுக்கு உள்ளே சென்று அங்கேயே இருங்கள்" என சாந்தனு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்