விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்தானாம்.
நிவேதா பெத்துராஜ், தமிழில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே...’ பாடல், அனைவருக்கும் பேவரிட்டான பாடலாக அமைந்தது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்தார். தற்போது இவர் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வருகிறார்.
நிவேதாவுக்கு, விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ட்விட்டரில் கூட இதை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அப்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிஇஓவான ஹேமா ருக்மணி, ‘விரைவில் உன் ஆசை நிறைவேறும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் அளித்த பேட்டியில், ‘பைரவா’ படத்தில் நடிக்க முதலில் தன்னை அணுகியதாகவும், ஏதோ காரணத்தால் தான் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ், தமிழில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே...’ பாடல், அனைவருக்கும் பேவரிட்டான பாடலாக அமைந்தது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்தார். தற்போது இவர் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வருகிறார்.
நிவேதாவுக்கு, விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ட்விட்டரில் கூட இதை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அப்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிஇஓவான ஹேமா ருக்மணி, ‘விரைவில் உன் ஆசை நிறைவேறும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் அளித்த பேட்டியில், ‘பைரவா’ படத்தில் நடிக்க முதலில் தன்னை அணுகியதாகவும், ஏதோ காரணத்தால் தான் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.